12 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து சித்திரவதை: அழகான மனைவியின் துயரம்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், எச்.மடகேரே கிராமத்தைச் சேர்ந்த சுனாலயா சுமா என்ற பெண், தன் கணவரால் 12 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்ட கொடுமையான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுனாலயா தன்னை விட அழகாக இருந்ததால், அவளை வேறு யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

சுனாலயா வேலைக்கு சென்ற பிறகு, மனைவி அக்கம் பக்கத்து விட்டாரிடம் பேசுவதை தடுக்க, வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் பலகை கொண்டு அடைத்து விட்டு, வெளிக்கதவை மூன்று பூட்டு போட்டு பூட்டிச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

மிக கொடுமையான விஷயம் என்னவென்றால், சுமா அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் கழிவறை என்பதே இல்லை. வீட்டிற்கு வெளியே தான் கழிவறை இருந்தது. கணவன் ஒரு வாளி கொடுத்து அதில் இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்ள செய்துள்ளான். நள்ளிரவில் அவன் திரும்பியவுடன் வாளியில் உள்ள கழிவுகளை அவனே எடுத்துச்சென்று வெளியே கொட்டுவதையும் வாடிக்கையாக்கி உள்ளான்.

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மகளை, தாயுடன் வீட்டுக்குள் அடைத்து வைத்து விட்டு மூத்த மகனை மட்டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.

அக்கம் பக்கத்து வீட்டார் மூலம் தகவல் கிடைத்ததும், வழக்கறிஞர் சித்தப்பாஜி, சப்-இன்ஸ்பெக்டர் சுபன் மற்றும் இதர அதிகாரிகள் பெண் அடைக்கப்பட்டிருந்த பூட்டு மற்றும் கதவை உடைத்து சோதனை நடத்தினர். ஜன்னலை உடைத்ததும் உள்ளே இருந்து பெண் பதற்றத்துடன் உதவி கேட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் இரண்டு குழந்தைகளையும் அதிகாரிகள் மீட்டனர்.

சுமாவிடம் விசாரணை நடத்திய போது, கடந்த 12 ஆண்டுகளாக கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி, சித்திரவதை செய்து வீட்டுக்குள் அடைத்து வைத்து செல்வதை வாடிக்கையாக்கியதாக தெரிவித்தார்.

சுனலயாவுக்கு மூன்று மனைவிகள் என்றும், முதல் இரண்டு மனைவிகளும் அவரது சித்திரவதை தாங்காமல் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 வது மனைவி சுமாவை அவரது தாய் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து சுனாலயாவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment